எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.18 - அழகர் தங்க குதிரை வாகனத்தில் இன்று மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடியும் தருவாயில் உள்ள நிலையில் அழகர் கோவில் சித்திரை திருவிழா முக்கிய கட்டத்தை நெருங்குகிறது. அழகர் கோவில் திருவிழாவில் அழகர் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வேடம் பூண்டு மதுரை வைகை ஆற்றில் இறங்குமா வைபவம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக சுந்தர்ராஜபெருமாள் நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு அதிர் வேட்டுக்கள் முழங்க கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் மலையை விட்டு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைத்ததோடு, அழகர் வரும் வழியில் எல்லாம் பக்தர்கள் திரண்டு நின்று அழகரை தரிசித்தனர். மறுநாளான நேற்று காலை 6 மணிக்கு அழகர் மூன்றுமாவடி வந்தடைந்தார்.அங்கு பக்தர்கள் எதிர்கொண்டுஅழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி மாலை 5 மணிக்கு அவுட் போஸ்ட் வந்தார். அங்கும் பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் எழுந்தருளுனார். இங்கு இரவு 1 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை அழகருக்கு அணிவிக்கப்படுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் துவங்குகிறது. இன்று (திங்கட்கிழமை) சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்ககுதிரை வாகனத்தில் அமர்ந்து காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிழக்க வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவே வைகை ஆற்றுக்குள் குவியத்தொடங்கி விட்டனர். அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் மேளம் தாளம் முழங்க நகர் முழுவதும் விடிய, விடிய ஆடிப்பானர்.
பிற்பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு வரும் அழகருக்கு பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது ஒரே நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும். இரவு 1 மணிக்கு அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலில் எழுந்தருளுகிறார். இங்கு விடிய, விடிய அழகரை பக்தர்கள் தரிசிக்கிறார்கள். நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், ஏகாந்த சேவையும் நடக்கிறது. காலை 10 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளிக்கிறார். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகர் இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சி நடைபெறுகிறது. அதிகாலை மோகனாவதாரத்துடன் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க கோலத்துடன் எழுந்தருளுகிறார். 21 ம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசிப்பார்கள்.
அழகர் மதுரைக்கு வரும் நோக்கம் தான் என்ன?
அழகர் மதுரைக்கு வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது, திருவிக்கிரமன் அவதாரத்தில் தோன்றிய வாமனன், முதல் அடியால் மேல் ஏழு உலகங்களை அளந்தார். பிரம்ம லோகத்தின் அதிபதியான பிரம்மா, கங்கை தீர்த்தத்தால் பிரம்மாவின் பாதத்தை சுத்தம் செய்தார். அப்போது பெருமாளின் பாத சிலம்பிலிருந்து சில நீர்த்துளிகள் அழகர் மலை மேல் விழுந்து ஆறாக ஓடியது. அதுவே நூபரகங்கை என்று அழைக்கப்படுகிறது.
நூபுர கங்கை தீர்த்தத்தில் சுபதஸ்முனிவர் நீராடிக்கொண்டிருந்தார். துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் அங்கு வந்தார். அவரை கவனிக்காத சுபதஸ் தொடர்ந்து நீராடினார். ஆத்திரம் அடைந்த துர்வாச முனிவர் மண்டூகமாய் கடவாய் என அவரை சபித்தார். இதற்கு விமோசனமே இல்லையா என சுபதஸ் முனிவர் வருந்தினார். வேதவகி (வைகை) கரையில் வஞ்சக்கள்வன் முகம் காணின் உன் வருத்தம் நீங்கும் என கூறிச்சென்றார் துர்வாச முனிவர். இதற்காகத்தான் அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜபெருமாள் மதுரை புறப்பட்டு வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.