முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு விசாரணையில் சோனியா-சிதம்பரம் பெயர்கள்...!

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.20 - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சோனியா, கருணாநிதி, சிதம்பரம், கனிமொழி உட்பட 24 பேர் சேர்க்கப்பட உள்ளதாக சுப்ரமணியசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியசாமி கூறியதாவது:-

தமிழக அரசியலில் தி.மு.க.விட அ.தி.மு.க. கூடுதலாக வாக்கு பெறும் அ.தி.மு.க. பெரும்பான்மை பெறும். ஸ்பெக்ட்ரம் வழக்கு விவகாரத்தில் சோனியா மீது வழக்கு தொடர பிரதமரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளேன். 3 மாத்ததில் அனுமதி தராவிட்டால் ராசா விவகாரம் போல் சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வழக்கு தொடருவேன்.

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அன்னா ஹசாரே தன்னுடன் அரசியல் வாதிகளையும் இணைத்து கொள்ள வேண்டும். அவரது போராட்டம் நேர்மையானது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி, கருணாநிதி, சோனியா, சிதம்பரம் உள்பட 24 பேர் பெயர்களை மே 24-ந்தேதி விசாரணையில் சேர்க்க உள்ளோம். அதன்பிறகு கைது நடவடிக்கைகள் தொடரும்.

இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்