முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே நடந்த 2 பேர் கொலையில் 6 பேர் சிக்கினர்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.20 - மதுரை அருகே நடந்த இரட்டைக்கொலையில் 6 பேர் பிடிபட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.மதுரை அடுத்த ஊமச்சிகுளம் அருகே உள்ள உச்சப்பரம்பு மேட்டை சேர்ந்தவர் பம்பையன். இவரது மகன் விஸ்வநாதன்(25) சலவை கடை நடத்தி வந்தார். இவரது கடை அருகே முருகேசன் என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். முருகேசன் மகன் மணிகண்டனும், விஸ்வநாதனும் நண்பர்கள். இந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் தினமும் இந்த டீக்கடை அருகே அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.  இதற்காக டீக்கடையில் தண்ணீரும், கிளாசும் கேட்பதும், இதற்காக விஸ்வநாதனின் தந்தையும், மணிகண்டவேலனும் கண்டிப்பது வழக்கம். சம்பவத்தன்று மாலை மணிகண்ட வேலன் கடை வாசல் பகுதியில் அந்த கும்பல் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தது. இதை மணிகண்டவேலன் கண்டித்தார். இதில் வாக்குவாதம் முற்றியது.

   அப்போது குடிபோதையில் இருந்தவர்கள் மணிகண்டவேலனை கத்தியால் குத்த முயன்றனர். இதை பார்த்த விஸ்வநாதன் விலக்கி விட முயன்றார். அவரையும், மணிகண்ட வேலனையும் அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதுகுறித்து ஊமச்சி குளம் போலீசார் வழக்குரப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மணிகண்டன், ராமு, அவரது மைத்துனர் மணிகண்டன், வீரமணி, ரமேஷ் மற்றும் சவுந்தர் ஆகிய 6 பேரை பிடித்தனர். தலைமறைவாகி உள்ள பாலமுருகன், வடிவேல் ஆகியோரை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்