முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்: பலி 9 ஆக உயர்வு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

சிட்னி, பிப். 9 - சாலமன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள சாலமன் தீவுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாலமன் தீவுகளை சிறிய அளவு சுனாமி தாக்கியது. கடலில் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரை காணவில்லை. சுனாமியால் 3 கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

நிலநடுக்கம் ஏற்பட்டது மலைபாங்கான பகுதி என்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அச்சத்தின் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மறுக்கின்றனர். அதனால் அவர்கள் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமரின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் ஹெர்மிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்