எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.21 - வாக்குப்பதிவு முடிந்து 6 நாட்களுக்குள்ளேயே தி.மு.க. அரசு பல வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் என்னென்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, வேலியே பயிரை மேய்வது போல, சட்டம்ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்களே சட்டம்ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபடும் அவல நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.
அண்மைக் காலமாக, கொலை, கொள்ளைகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.4.2011 அதிகாலை ஒரு மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.
இதே போன்று, மதுரை மாவட்டம், உச்சபரம்புமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்த சந்துரு என்பவரை தி.மு.க. ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளது. மதுரையில் மட்டும் கடந்த 15 நாட்களில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போல், சென்னை கல்லூரி மாணவர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலை மறியல் நடத்திய மாணவமாணவியர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது, அ.தி.மு.க. ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை தி.மு.க. ரவுடிகள் நள்ளிரவில் தாக்கியுள்ளனர்.
இதே போன்று, சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மேற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் பணியாற்றியதன் காரணமாக, தே.மு.தி.க. மாவட்டப் பொருளாளர் கேசவன் மீது தி.மு.க. ரவுடி கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த கேசவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவற்றின் உச்சகட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மும்தாஜ் என்பவர் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, தி.மு.க.வைச் சேர்ந்த கல்யாணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முரளீதரன் தனது வாகனத்திற்கு, மும்தாஜ் வழிவிட மறுக்கிறார் என்று தெரிவித்து, அவரையும், அவரது மகனையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் துறை உதவி ஆய்வாளர் மும்தாஜ் மற்றும் அவரது மகன் மீது பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்த அளவுக்கு காவல் துறையினரை தி.மு.க. மேலிடம் நிர்பந்தித்துள்ளது. தி.மு.க.விற்கு சாதகமாக காவல் துறை செயல்படுவதை கண்டித்து, காவல் துறை உதவி ஆய்வாளர் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது. காவல் துறை உதவி ஆய்வாளருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள். பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை; காவல் துறையினருக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
தற்போது தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபட்டதாகத் தெரியவில்லை. குற்றவாளிகளை போலீசார் தேடிக் கொண்டே இருக்கின்றனர். இதை வைத்தே மைனாரிட்டி தி.மு.க. அரசு யாருக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். வாக்குப் பதிவு முடிந்து 6 நாட்கள் முடிவதற்குள்ளேயே இந்த நிலைமை என்றால், வாக்கு எண்ணிக்கை நாள் வருவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசை வைத்துக் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்தப் போகிறதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தமிழக மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை களையும் வகையில், உறுதியான, திடமான முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும், சட்டம்ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.