முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய சதுரங்க போட்டி: டால்பின் பள்ளி மாணவிகள் தேர்வு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

மதுரை,ஏப்.26 - தேசிய சதுரங்க போட்டிக்கு மதுரை டால்பின் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் கடந்த 17 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் விளையாட மதுரை டால்பின் பள்ளி மாணவிகள் மீனுபிரியா, ஹேமலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 11 சுற்றுக்கள் நடைபெறும் இப்போட்டியில் மாணவி மீனுபிரியா 7.5 புள்ளிகளை பெற்று 6 ம் இடத்தையும், மாணவி, ஹேமலெட்சுமி 7 புள்ளிகள் பெற்று 12 ம் இடத்தையும் பிடித்தார். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் டால்பின் பள்ளி மாணவிகள் இருவர் மட்டுமே தேசிய சதுரங்க சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் ஏ.ஆர். ராமநாதன், பள்ளி தலைமை சதுரங்க பயிற்சியாளர் திருநாகலிங்கம், சிறப்பு பயிற்சியாளர் கெளஸ் கமாருதீன் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பள்ளி முதல்வர் பத்மா வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்