எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.26 - 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் சி.பி.ஐ. குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள, கருணாநிதியின் மகள் கனிமொழியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கலைஞர் டி.வி. உரிமத்தை ரத்து செய்து அதன் ஒளிபரப்பை தடை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவால் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய பயனாளிகளுக்கும், மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே உள்ள சட்ட விரோத பணப் பரிமாற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் முக்கிய பயனாளி நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஆரம்பித்த ஷாகித் பால்வா தொடர்புடைய திகைப்nullட்டும் பல நிறுவனங்கள் வழியாக கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்தத் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கலைஞர் டி.வி.யின் 60 விழுக்காடு பங்குகளை கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் வைத்திருக்கிறார். 20 விழுக்காடு பங்குகள் கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழிக்கு சொந்தமானது. சில வாரங்களுக்கு முன்பு தயாளு அம்மாளையும், கனிமொழியையும் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தது. அப்பொழுதிலிருந்தே, மத்திய புலனாய்வுத் துறையின் குற்றப் பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியின் பெயர்கள் இடம் பெறும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது.
இந்த வகையில், இன்று மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இருப்பதில் எவ்வித வியப்பும் இல்லை. இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம்.
இந்தச் சூழ்நிலையில், சில பிரச்சினைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்வது பொருத்தமாக இருக்கும். கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு வெறும் 20 விழுக்காடு பங்கு மட்டும் இருக்கையில், தயாளு அம்மாளுக்கு ஏன் 60 விழுக்காடு பங்கு? இதற்குக் காரணம், தனிப்பட்ட முறையில் அவர்கள் இந்த பங்குகளை வைத்திருக்கவில்லை. கனிமொழி, தனக்கும், தனது தாயார் ராஜாத்திக்கும் சேர்த்து 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், இருவருக்கும் இதில் சம பங்கு உண்டு.
இதே போன்று, தயாளு அம்மாள் வைத்திருக்கும் 60 விழுக்காடு பங்கில் தயாளு அம்மாளை தவிர, அவரது கணவர் மு. கருணாநிதி, அவருடைய மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு மற்றும் மகள் மு.க. செல்வி ஆகியோருக்கும் சம பங்குகள் உண்டு. தனக்கு எந்தவித பயனும் இல்லாத, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதை ஷாகித் பால்வாவால் எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததற்கு பிரதிபலனாக, லஞ்சமாக, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கேட்டுக் கொள்ளாமல், இந்த பணத்தை கலைஞர் டி.வி.க்கு ஷாகித் பால்வா அளித்திருக்க மாட்டார்.
இதே போல், தன்னுடைய தலைவர் கருணாநிதி கேட்டுக் கொள்ளாமல், தனக்கு தொடர்பில்லாத கலைஞர் டி.வி. நிறுவனத்திற்கு லஞ்சமாக 214 கோடி ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று ராசாவும் வலியுறுத்தியிருக்க மாட்டார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 214 கோடி ரூபாய் ஷாகித் பால்வாவால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம். மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்றால், இந்த 214 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை சென்றடைந்து இருக்கும்.
எனவே, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்பத்தினரின் தொடர்பு இத்துடன் நின்றுவிடவில்லை. வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியிருந்த ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஷாகித் பால்வாவினுடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 17.12.2008 அன்று ஒதுக்கியது.
துபாய் நாட்டைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குரூப் என்ற நிறுவனத்தின் தலைவரும், இந்திய நாட்டில் வசிக்காத இந்திய வியாபாரியுமான சையத் முகம்மது சலாவுதீனின் இளைய மகன் அஹமத் சையத் சலாவுதீன் என்பவர் தான் ஜெனிக்ஸ் எக்சிம் சார்பில் ஸ்வான் டெலிகாம் குழுவில் அங்கம் வகிக்கிறார். இந்தக் குழுமம் தான், 1970களில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் முதல் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய புதிய தலைமைச் செயலக கட்டிடம் வரை, தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் போது கட்டப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தொடர்பு கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் 2,000 கோடி ரூபாய் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தை இந்தக் குழுமம் தான் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தக் குழுமத்தைச் சேர்ந்த சில முக்கியமான நபர்களின் பெயர்கள் கருணாநிதியின் ஊழல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. கருப்புப் பணத்தை சலவை செய்வதில் தேர்ச்சி பெற்ற, கருணாநிதியுடன் nullண்ட காலமாக, நெருங்கிய தொடர்புடைய இந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாக கருத முடியாது. கலைஞர் டி.வி.க்கு சென்ற 214 கோடி ரூபாய்க்கும் மேல், பல கோடி ரூபாய் பணம் கருணாநிதி குடும்பத்திற்காக, ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் வெளி நாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற கூற்றினை, வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றதுடன் இந்தப் பிரச்சினை நிச்சயம் நின்றுவிடாது. லஞ்சப் பணத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.யின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்; அதன் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி உட்பட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும்.
இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். அப்பொழுது தான் அனைத்து ஊழல்களின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணை நியாயமான முடிவினை சென்றடையும். விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவதில் வல்லவரான ஒருவர் தான் இந்த மாபெரும் ஊழலை நிகழ்த்தி இருக்கிறார் என்பதை மத்திய புலனாய்வுத் துறை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.