முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா மரணம் - அதிர்ச்சியில் 4 பக்தர்கள் சாவு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புட்டபர்த்தி,ஏப்.26 - சாய்பாபா மரண செய்தியை நேற்று காலையில் ஆந்திராவில் உள்ள தெலுங்கு தனியார் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. இதை கிழக்கு கோதாவரி மாவட்டம் ரெட்டிபலிஜா நகரை சேர்ந்த பெண்கள் கூட்டமாக நின்று டி.வியில் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சாய்பாபாவின் தீவிர பக்தரான மங்கம்மாவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார். 

புலிப்பாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடரெட்டி, டி.வியில் சாய்பாபாவின் மரண செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கதறி அழுத அவர் திடீரென மரணமடைந்தார். இதே போல் புட்டபர்த்தி ஜன்டாபானு தெருவை சேர்ந்த நாராயணம்மா சாய்பாபா மரணத்தை கேட்ட அதிர்ச்சியில் இறந்து போனார். கிருஷ்ணா மாவட்டம் தரசாபுரத்தை சேர்ந்த ராணி, சாய்பாபா மரண செய்தியை கேட்டதில் இருந்தே அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் மரணம் அடைந்தார். சாய்பாபாவின் மரணத்தால் ஆந்திரா முழுவதும் சோக மயமாக காணப்படுகிறது. அங்குள்ள கோவில்களில் சாய்பாபாவுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. சாய்பாபா ஆசிரமங்களில் பஜனைகள் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்