முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்காளத்தில்தான் மோசமான நிர்வாகம் - ப.சிதம்பரம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஏப்.26 - நாட்டிலேயே மோசமான நிர்வாகம் மேற்குவங்காளத்தில்தான் நடக்கிறது என்று இடதுசாரி முன்னணி அரசு மீது மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசினார். மேற்குவங்க சட்டசபைக்கு 6 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டமாக 50 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மூன்றாவது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதில் 70 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 3-வது கட்ட தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. காங்கிரஸ்-திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுஷ்மா சுவராஜ், இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோமநாத் சாட்டர்ஜி, முதல்வர் புத்ததேவ், பிருந்தா காரத் மற்றும் வலது கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன், டி.ராஜா உள்பட தலைவர்கள் நேற்று தீவிர பிரசாரம் செய்தனர். பிரசாரம் நேற்றுமாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையில்  ப.சிதம்பரம் நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டிலேயே மேற்குவங்காளத்தில்தான் மோசமான நிர்வாகம் நடக்கிறது. இடது கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தொண்டர்களும் வன்முறையை ஏற்படுத்தி மாநிலத்தை கொலைக்களமாக மாற்றி வருகிறார்கள் என்றார். மேற்குவங்காளத்தின் நிதிநிலைமை மோசமாகி போய்விட்டது. சட்டம்-ஒழுங்கு படுமோசமாக போய்விட்டது. இதுகுறித்து கடந்த பல மாதங்களாக மாநில முதல்வர் புத்ததேவ் மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எடுத்துக்கூறி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அது பற்றி அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்று ப.சிதம்பரம் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்