முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.26 - சத்ய சாய்பாபாவின் மறைவுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆந்திர பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் ஆன்மீககுரு சத்ய சாய்பாபா நேற்று முன்திம் காலமானார். 

அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்பு என்ற மதத்தின் சிந்தனை ஊற்றாகவும் ஒளி விளக்காகவும் இருந்தவர் சாய்பாபா என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்புக்கு எடுத்துக்காட்டாக அவரது போதனைகள் நம்முடன் எப்போதும் இருக்கும் என்றும் இளம் தலைமுறையினருக்காக சாய்பாபா சிறப்பான சேவைகளை செய்துள்ளார் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலும் உலக அளவிலும் அவருக்கு லட்சக்கணக்கான சீடர்கள் உள்ளனர் என்றும் அன்பு மதத்தை போதித்தார் என்றும் மனிதாபிமான இனத்தை தோற்றுவித்தார் என்றும் இதயம் என்ற மொழியை உருவாக்கியவர் சாய்பாபா என்றும்  ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.

கல்வி , மருத்துவம், குடிநீர் போன்ற பல்வேறு துறைகளில் மக்களுக்கு அவர் சிறப்பான சேவைகளை செய்தார் என்றும் ராகுல்  காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்