முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புது டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.26 - புது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அது வெறும் மிரட்டல் எனத் தெரியவந்தது. 

இது குறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லி அசோகா சாலையில் அமைந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 10 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில பேசிய மர்ம ஆசாமி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். 

இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர் குழுவினர் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என கண்டறியப்பட்டது. தொலைபேசி அழைப்பு வெறும் மிரட்டல் என தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்