முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்தாத்தில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி - 51 பேர் காயம்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஏப். 20  - பாக்தாத் அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடித்ததில் 27 பேர் பலியானார்கள். 51 பேர் படுகாயமடைந்தனர். ஈராக்கில் ஜியா முஸ்லீம் தலைமையிலான ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈராக்கில் இன்று மாகாண தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15 ம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத் சோதனை சாவடி அருகே கார் குண்டுவெடிப்பு நடந்தது. அதனையடுத்துள்ள குர்மாத் நகரில் உள்ள சாலையில் 3 இடங்களில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 31 பேர் இறந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாக்தாத் அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டு வெடித்ததில் 27 பேர் பலியாயினர். இந்த நிகழ்வுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்