முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணிக்கு பலமான அடித்தளம் அமைந்துள்ளது - பொலிஞ்சர்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப். 29 - இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தி ல் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணிக்கு இப்போது பலமான அடித்தளம் அமைந்துள்ளது என்று அந்த அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான டக் பொலிஞ்சர் தெரிவித்தார். 

கடந்த 27 -ம் தேதி நவி மும்பையில் ஒரு லீக் ஆட்டம் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் சென்னை அணி இறுதியில் 3 விக்கெட் வித்தியாச த்தில் அபார வெற்றி பெற்றது. இதில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ் த்திய பொலிஞ்சர் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். 

நவி மும்பையில் நடந்த இந்த ஆட்டத்தில் புனே வாரியர்சுக்கு எதிராக  வெற்றி பெற்றது குறித்து ஆஸ்திரேலிய முன்னணி வீரரான டக் பொ லிஞ்சர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது - 

நாங்கள் சாம்பியன் அணி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் புனே அணியை தொடர்ந்து 2 முறை வீழ்த்தியுள்ளோம். இப்போது தான் எங்கள் அணிக்கு பலமான அடித்தளம் அமைந்துள்ளது. இதே நிலை நீடித்து வெற்றி தொடர எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவோம். 

தமிழக வீரர் பத்ரிநாத் மற்றும் சுரேஷ் ரெய்னாஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பத்ரிநாத் அவருக்கு தரப்பட்ட வாய்ப்பை சிறப்பா க பயன்படுத்திக் கொண்டார். 

அவருடைய பேட்டிங் பார்ம் மிகவும் திருப்தி அளிக்கிறது. சென்னை அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் எந்த சூழலிலும் சிறப்பாக ஆடக் கூடியவர்கள். எங்களது பந்து வீச்சாளர்களின் பங்கேற்பு சிறப்பானது. 

குறிப்பாக, அஸ்வினின் சுழற் பந்து வீச்சு எதிரணிக்கு சவாலாக உள்ளது. நவி மும்பை ஆடுகளம் எனது பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த து. ஆடுகளத்தின் தன்மைக் கேற்ப எனது பந்து வீச்சு இருந்ததால் தான் 3 விக்கெட் வீழ்த்த முடிந்தது. 

இப்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள எங்கள் அணியின் சிறப் பான ஆட்டம் இனிமேலும் தொடரும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஆஸி. வேகப் பந்து வீச்சாளரான பொலிஞ்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்