எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஏப். - 30 - சார்லஸ்-டயானா தம்பதிகளின் மகனான பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமிற்கும் அவரது 10 ஆண்டுகால காதலி கேதரின் மிடில்டனுக்கும் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. லண்டனில், வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள தேவாலயத்தில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். திருமணத்தைக்காண சுமார் 10 லட்சம் பேர் குவிந்ததால் லண்டன் மாநகரமே குலுங்கிப்போனது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேதரின் மிடில்டனை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி அவர்களின் திருமணம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இதனால் லண்டன் நகரமே கடந்த சில நாட்களாக விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க 50 நாட்டு தலைவர்கள் உட்பட சுமார் 2000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நேற்று காலை இங்கிலாந்து நேரப்படி 8.15 மணிக்கு துவங்கின. இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேவாலயத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் குடும்பத்தினரும் அடுத்தடுத்து தேவாலயத்திற்கு வந்தனர். மணமகள் கேதரின் குடும்பத்தினர் தேவாலயம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தனர். முன்னதாக மணமகன் வீட்டார் தேவாலயத்திற்கு வந்ததும், மணமகள் குடும்பத்தினரும் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரிட்டீஷ் ராஜகுடும்பத்து திருமணங்கள் எப்போதுமே மிக விமர்சையாக நடத்தப்படும். அதைப்போலவே இந்த திருமணமும் வெகு விமரிசையாக நடந்தது. அதுவும் வில்லியம் பட்டத்து இளவரசர் என்பதால் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன. இந்த திருமணத்தைக் காண தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு குவிந்திருந்தார்கள். தாமதமாக சென்றால் இடம் கிடைக்காது என்பதால் நேற்று முன்தினமே தேவாலயம் பகுதியிலும், மணமக்கள் அரண்மனைக்கு செல்லும் பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் திரண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் உலகமே ஆவலோடு எதிர்பார்த்த பிரிட்டீஸ் இளவரசர் வில்லியம் அவரது காதலி கேதரின் ஆகியோரது திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபேயில் உள்ள தேவாலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. அங்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. முன்னதாக மணமக்கள் இருவரும் ஊர்வலமாக காரில் அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தனர். பின்னர் தேவாலயத்திற்கு மணமக்கள் வந்து சேர்ந்தனர். தனது 10 ஆண்டுகால காதலி கேதரின் விரலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார். அப்போது இருவரும் திருமண உறுதியேற்றுக்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தால் அந்த தேவாலயமே அதிர்ந்தது. பின்னர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. டயானா மறைவுக்கு பிறகு இப்படி ஒரு சிறப்பான திருமணம் லண்டனில் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சார்லஸ், டயானா திருமணத்திற்கு பிறகு அரச குடும்பத்தில் இப்படி ஒரு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் மண்டியிட்டு நிற்க திருமண ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 90 தொலைக்காட்சிகள் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தன. 2001 ம் ஆண்டு ஆண்ட்ரூ பல்கலையில்தான் கேத்ரினை சந்தித்தார் இளவரசர் வில்லியம். இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நேற்று திருமணத்தில் முடிந்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கேதரின். நேற்று இளவரசரை கரம் பிடித்ததன் மூலம் இவரும் அரச குடும்பத்தில் இணைந்து விட்டார். 350 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் புறப்பட்டு சென்றனர். சார்லஸ், டயானா தம்பதிகள் சென்ற அதே சாரட் வண்டி நேற்று இவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவர்களை பின் தொடர்ந்து ராணி எலிசபெத்தும் சென்றார். இவர்களது அணிவகுப்பு பக்கிம்ஹாம் அரண்மனையை அடைந்தது. முன்னதாக இவர்கள் செல்லும் வழியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தம்பதிகளை பார்த்து உற்சாக வெள்ளத்தில் கையசைத்தனர். பின்னர் அரண்மனை மாடத்திற்கு சென்று தம்பதிகள் மக்களுக்கு காட்சியளித்தனர். அப்போது இளவரசர் வில்லியம், கேதரினுக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டார். முன்னதாக, இந்த திருமணத்தின் போது கேதரின் விரலில் மோதிரம் அணிவித்த வில்லியமும், அவரது மனைவி கேதரினும் இன்பத்திலும், துன்பத்திலும் இனி இணைபிரியாது இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு தேவாலய பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இந்த திருமணத்தையடுத்து கேம்பிரிட்ஜ் கோமகன் ஆகியிருக்கிறார் இளவரசர் வில்லியம். இந்த திருமணத்தையொட்டி லண்டனில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். லண்டன் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த திருமணத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். முன்னதாக திருமணத்தின்போது இளவரசர் வில்லியம் ராணுவ கர்னல் போன்று சிவப்பு உடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். கேதரின் பாரம்பரிய வெள்ளை உடையில் புன்னகையுடன் காணப்பட்டார். வில்லியமை கரம்பிடித்ததன் மூலம் தற்போது அவர் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.