எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்- வாஷிங்டன், மே 3-சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நேற்று பாகிஸ்தானில் சுட்டுக்கொன்றனர்.சுமார் 10 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த அல் கொய்தா இயக்க தலைவன் பின்லேடனின் கதை இத்துடன் முடிந்தது. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதலை நடத்தினர். நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக இரட்டை கோபுரம், வாஷிங்டனில் உள்ள பெண்டகன் எனப்படும் அமெரிக்க ராணுவ தளம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோத விட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று அல் கொய்தா கூறியது. இந்த சம்பவத்தினால் திக்கு முக்காடிப்போன அமெரிக்கா உலகில் தீவிரவாதிகளே இருக்கக்கூடாது என்று கூறி சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு போருக்கு அழைப்பு விடுத்தது. இந்த தாக்குதல்களுக்கு காரணமான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தங்கியிருக்கிறான் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடந்த 2002 ம் ஆண்டு முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா நடத்தியது. இந்த போரில் அமெரிக்க ஆதரவு நாடுகளும் குதித்தன. நீண்ட காலம் போர் நடந்தும் கூட ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள அபோடாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ஒசாமா பின்லேடனும் அவனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளும் தங்கி இருப்பதாக அமெரிக்க உளவுப் படையான சி.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க ராணுவத்தின் மூன்று ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் வந்தன. பாகிஸ்தான் ராணுவத்திற்கே தெரியாமல் பின்லேடன் தங்கியிருந்த சொகுசு மாளிகை மீது நேற்று அதிகாலை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் வந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின்போது அந்த விடுதியில் இருந்த அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அதனால் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நடத்திய தாக்குதல் பலருக்கு தெரியவில்லை. பின்லேடனின் அரேபிய மெய்க்காப்பாளர்கள்கூட இதை சற்றும் எதிர்பார்க்காமல் சிறிது நேரம் கழித்தே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது பின்லேடன் ஆதரவாளர்களுக்கும் அமெரிக்க அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அமெரிக்க வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். மேலும் பின்லேடனின் இளைய மகன் உள்ளிட்ட மேலும் 3 பேரும் இந்த தாக்குதலில் பலியானார்கள். கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடலை அமெரிக்க வீரர்கள் ஹெலிகாப்டரில் ஏற்றி அண்டை நாடான ஆப்கானிஸ்தானிற்குள் கொண்டு சென்றனர். மேலும் பின்லேடனின் இளைய மனைவி உள்ளிட்ட உள்ளிட்ட சிலரையும் அவர்கள் கைது செய்து அதே ஹெலிகாப்டரில் கொண்டு சென்றனர். இந்த தகவலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் இதை ஒப்புக்கொண்டுள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் இது நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி மூலம் நேரடியாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார். கடந்த 10 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனின் கதை இத்துடன் முடிவுக்கு வந்தது. 54 வயதான ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவனது உடல் அமெரிக்க ராணுவ வீரர்களின் காவலில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பாரக் ஒபாமா தெரிவித்தார்.
இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து சேனல்களிலும் பரபரப்பாக ஒளிபரப்பானது. பின்லேடன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்த அமெரிக்கர்கள் கும்மிருட்டு நேரத்திலும் வெள்ளை மாளிகை முன் பெருமளவில் திரண்டு ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட பின்லேடனின் உடல் பிறகு இஸ்லாமிய முறைப்படி வளைகுடா பகுதியில் கடலுக்கு அடியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பின்லேடனின் சடலத்தை வேறு எங்காவது நிலப்பகுதியில் புதைத்தால் தீவிரவாதிகள் அல்லது அவரது ஆதரவாளர்கள் அந்த இடத்தை ஒரு நினைவிடமாக ஆக்கிவிடலாம் என்பதால் பின்லேடனின் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.