முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் தூண்டுதலின் பேரில் நரிக்குறவர் குடியிருப்பில் சோதனை

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் மே 7, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டதால் ஆத்திரமடைந்த அமைச்சர் சுப.தங்கவேலன் தூண்டுதலின் பேரில் வனத்துறையினர் நரிக்குறவர் குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து 2 பேரை பிடித்துச் சென்றனர். அதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் வனத்துறையினர் 5 பேரை வாகனத்துடன் சுறை பிடித்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடாண தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்கள் காலம் காலமாக அஇஅதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்கள் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானை ஆதரித்தனர். அதனால் ஆத்திரமடைந்த திருவாடாணை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சுப.தங்கவேலனின் தூண்டுதலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் நேற்று எம்.ஜி.ஆர். நகர் நரிக்குறவர் குடியிருப்பில் புகுந்து சோதனை என்ற 

செயரில் வீடுவீடாக புகுந்து அத்துமீறியுள்ளனர். 2 பேரை பிடித்துச் சென்றுவிட்டனர். 

அதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர் சமுதாயத்தினர் மீண்டும் சோதனைக்கு வந்த வனத்துறை அலுவலர்கள் 5 பேரை வாகனத்துடன் சிறை பிடித்தனர். பல மணி நேரத்திற்கு பின் போலீசார் வந்து வனத்துறையினரை மீட்டு அழைத்து சென்றனர். 

இந்த தகவல் அறிந்ததும் அதிமுக மாவட்ட பொறுப்பாளர் அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சம்பவம் நடந்த நரிக்குறவர் குடியிருப்புக்கு விரைந்து சென்று வனத்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 2 பேரை மீட்டு ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்