எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 8 - 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தனது மகள் கனிமொழியை காப்பாற்றுவதற்காக ``தகத்தகாய கதிரவன்'' என்று கூறி வந்த தனது கட்சிக்காரர் ராசாவை குற்றவாளியாக்கி பல்டி அடிக்கும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ராசா நடந்த உண்மைகளை சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார். இது பற்றி அவர் சென்னையில் நேற்று (மே.7) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அதிகமாக பலன் பெற்றது கருணாநிதி குடும்பம் என்பதை நாடு அறியும். இந்த இமாலய ஊழலுக்கு ஆ.ராசா பிரதான சதிச் செய்தவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும் அவர் ஒரு கருவியே. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தகவல்கள் மெல்ல கசிய ஆரம்பித்தபொழுதும் நாடாளுமன்றத்தில் ஆ.ராசா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்தபோதும் தமிழ்நாடு முதல்வர் திட்டமிட்டே ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பதலிருந்து தவிர்த்து வந்தார்.
ராசா பதவி விலக்கப்பட்டு தீரவேண்டும் என்ற நிர்பந்தம் எழுந்தபோதும் ஜெ.பி.சி விசாரணைக்கு எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியபோதும் கூட முதல்வர் ஜனநாயக ரீதியாக பதில் அளிக்கவில்லை. ஆ.ராசா தலித் என்பதற்காகவே குற்றம் சுமத்தபடுகிறது என்று மெகா ஊழலுக்கு சாதிய வர்ணம் பூசினார். இது ஆரிய-திராவிட போர் என்று முழங்கினார். ஒரு படி மேலே சென்று தோழமை அமைப்புகள் வாயிலாக கண்டன கூட்டங்களுக்கும் நடத்தப்பட்டன. ஆனால் அது எல்லாம் ஒரு சில நாட்களே நீடித்தன.
ராசா கைது செய்யப்பட்டார். பொதுக்குழு கூடியது. பத்திரிகையாளர் கூட்டத்தில் ராசா குற்றவாளி என நீரூபிக்கப்பட்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஆவேச பேட்டி அளித்தார். ஆ.ராசா தனது இளமை காலம் தொட்டு தி.மு.க. உறுப்பினராக இருக்கக்கூடியவர். நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ந்து மத்திய அமைச்சர் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர், தலித் கதிரவனாக வர்ணிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தலித் என்ற அடையாளத்தை பயன்படுத்துகிறார். அது எடுபடாது என்பதை தெரிந்த பின்பு தவறு செய்திருக்கிறார் என தெரிந்தால் வெளியேற்றுவோம் என்று சொன்னார். அப்பொழுது நடந்த பொதுக்குழுவில் ராஜாவிடமிருந்து பெறப்பட்டதாக ராசாவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டதும் உண்டு.
ராசா கைது செய்யப்பட்டபோது. இப்பொழுது தி.மு.க. பரிவாரங்கள் நீதிமன்றம் சென்றதுபோல் செல்லவில்லை. இன்று வரையிலும் தி.மு.க. அதிகாரபூர்வமாக சட்டதுணை வழங்கவில்லை. இதற்கும் ராசா தி.மு.க.வினுடைய உறுப்பினர் மட்டுமல்ல. குடும்ப உறுப்பினர் போலவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, ராசாவுடன் சேர்ந்து கூட்டுச்சதி புரிந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படிடிருக்கிறார். இப்பொழுது கனிமொழியை காப்பாற்ற பொதுக்குழு கூடுகிறது. கனிமொழியை காப்பாற்றுவதும், கட்சியை காப்பாற்றுவதும் ஒன்றே என தீர்மானம். ஒட்டுமொத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாட்டியாலா நீதிமன்ற அரங்கை நிரப்புகிறார்கள். முதல்தர வழக்கறிஞர்கள் வாதாட அழைக்கப்படுகிறார்கள். கனிமொழியை பிணையில் விட வழக்கறிஞரால் வாதம் வைக்கப்படுகிறது. கனிமொழியை காப்பாற்ற, கனிமொழி நிரபராதி என்று வாதாடுவதும், அதற்குண்டான ஆதாரங்களை முன் எடுத்து வைப்பதும் நியாயமாக இருக்கலாம்.
2 -ஜி ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் ராசாவுக்கு தலித் சாயம் பூசி?வர் தமிழ்நாடு முதல்வர், ராசா கைது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தவிர்க்க முடியாதது என்று தெரிந்தவுடன் தி.மு.க.விலிருந்து ராசா தூக்கி எரியப்படுவார் என்று முதல்வர் கூறினார். இப்பொழுது தங்கள் மகளை காப்பாற்றுவதற்காக எந்த விதமான கூச்சமும் இல்லாமல் அதே தி.மு.க.வால் சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசாவே பிரதான சதிகாரர் என்று இப்பொழுது குற்றம் சுமத்துகிறார்கள். கோடி, கோடியாக பணம் அவர் வாயிலாக வந்த போதும், குடும்பம் செழித்த போதும், ராசா தலித் கதிரவனாக சித்தரிக்கப்பட்டார். அன்று கடா வை போல வளர்க்கப்பட்டார் இன்று மகளை பாதுகாக்க ஆ.ராசா பலிகடா ஆக்கப்படுகிறார். இது என்ன நியாயம்? தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்ப அங்கத்தினர் கனிமொழி என்பதற்காக அவர் காட்டும் பாசத்திற்கும், துடிப்பிற்கும், சாதாரண ஏழை தலித் ஆன ஆண்டிமுத்துவின் மகன் தி.மு.க. குடும்பத்தின் அங்கத்தினரானலும் ஆ.ராசாமீது காட்டுகின்ற பரிவிற்கும் உள்ள வேறுபாட்டை இலட்சோப லட்சம் தி.மு.க. தொண்டர்கள் புரிந்துகொள்வார்கள் அதேபோன்று ராசாவுக்கு அவர் அளித்த தலித் முத்திரையும், முன்பு காட்டிய பரிவும் எவ்வளவு போலியானது என்பதையும் தமிழக தலித் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் கோடான கோடி தலித் மக்களுக்கு புரிந்து எள்ளி நகையாடுகிறார்கள்.
3 மாதத்திற்கு முன்பு ராசாவை பாதுகாக்க முயற்சித்த கருணாநிதி இப்பொழுது ராசாவின் தலித் முகத்திரை கிழிக்கப்பட்டு அவரை குற்றவாளியாக்கி தனது மகளை கருணாநிதி காப்பாற்ற நினைப்பது ராம்ஜெத்மலானி விவாதத்தில் தெரிகிறது. வழக்கு போகும் போக்கை பார்த்தார் கனிமொழியை அப்ரூவராக்கும் தோற்றம் தெரிகிறது. 2 ஜி விவகாரத்தில பலம் பெற்றவர்கள் கருணாநிதி குடும்பம். கலைஞர் டி.வி.க்குத்தான் ரூ.214 கோடி வந்துள்ளதே தவிர ராசாவிற்கு அல்ல. ராசா அதில் பங்குதாரரும் அல்ல. அதன் பங்கு தாரர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
ராசாவை மட்டும் தலித் என்று ஒதுக்கி தண்டனை தர முயற்சித்தால், தலித் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். ராசாவுக்கான இந்த போராட்டம் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க நடத்தப்படும் போராட்டம் அல்ல. குற்றம் செய்த எல்லோரும் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான். ஊழலுக்கு வக்காலத்து வாங்குவது எங்கள் நோக்கம் அல்ல. அனைவரும் குற்றவாளிகளே, ராஜெத்மலானியின் வாதம் தி.மு.க.வின் வாதமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இவ்வளவு நாள் ராசா குற்றம் அற்றவர் என்று சொன்னது மாறிவிட்டது. தி.மு.க.வின் சார்பில் இப்படிப்பட்ட வாதம் வைக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தலித் என்று தனிமைப்படுத்தினால் நாங்கள் ராசாவுக்கு துணையாக நிற்போம். கருணாநிதி தன்னுடைய குடும்பத்தை முன்னிலைபடுத்துபவர். சர்காரியாக கமிஷனிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக லட்சத்தீவை தரைவார்த்து கொடுத்தவர்.
2 ஜி விவகாரத்தில் ஆ.ராசா நடத்த உண்மைகளை சொல்வதுதான் சரியாக இருக்கும். கருணாநிதி தி.மு.க. ஒரு குடும்பம் என்று சொல்லிவிந்தார். தி.மு.க. என்றால் ஒரு குடும்ப சொத்து என்பது அவர்களது வாதத்தில் தெளிவாகிவிட்டது.
வரும் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு..க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: