எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், மே.- 8 - தமிழகத்தில் பல பகுதிகளிலும் மேலும் பல மாநிலங்களில் வேலை வாங்கித்தருவதாகவும் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாகவும் கூறி ஏராளமானோரை ஏமாற்றி ரூ. பல கோடிகளை மோசடி செய்த விவேகானந்தனின் மனைவியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். லிப்ட் ஆபரேட்டராக வாழ்க்கையை துவக்கிய விவேகானந்தன் சொகுசு வாழ்க்கை மோகத்தால் மோசடிகளில் ஈடுபட தொடங்கியதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சியை சேர்ந்த விவேகானந்தன் என்ற வெங்கடேஷ்(38). கேரள மாநிலம் பந்தனம் திட்டாவை சேர்ந்த பிருந்தா என்ற ரோஸ் மேரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு ராகுல், மதுஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவேகானந்தன் 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பிருந்தா பிளஸ் 2 படித்துள்ளார். எரிமேலியில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த வெங்கடேஷ், கேரளாவில் ஒரு திருமணத்தில் பிருந்தாவை பார்த்துள்ளார். கண்டவுடன் காதல் என்பது போல் அவர்கள் முதல் பார்வையிலேயே காதல் கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். லிப்ட் ஆபரேட்டர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே விவேகானந்தன் வெளிநாடுகளுக்கு சென்று எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்துள்ளார். அதில் குறைந்த அளவிலேயே வருமானம் கிடைத்த வெங்கடேசனும் அவரது குடும்பத்தினரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டனர். அதனால் என்ன செய்வது என ஆலோசித்தனர். உடனடியாக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பணம் கிடைக்காது என்பதை அறிந்த அவர்கள் மோசடி செய்வதில் ஆர்வம் காட்ட துவங்கினர். இதற்காக திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை அவர்கள் தேர்வு செய்தனர். ஓரிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் குடியிருந்தது இல்லை. வசிக்கும் பகுதியில் விவேகானந்தன் வகை வகையான பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்களில் பவனி வருவது வழக்கம். தான் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர் என்றும் தனக்கு பெரிய அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தெரியும் என்றும் பல தொழில்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் உள்ளதாக புரபகண்டா செய்வார். அரசுத்துறைகளில் உயர்வேலைகளையும் வெளிநாட்டில் தனியார் கம்பெனிகளில் அதிக சம்பளத்தில் வேலைகளையும் குறைந்த விலையில் தங்க கட்டிகளும் வாங்கித்தருவதாக கூறி பலரை நம்ப வைத்து ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக்கொண்டு அப்பகுதியை காலி செய்து அடுத்த ஊர்களில் குடியேறி அங்குள்ள அப்பாவி மக்களிடம் மோசடி செய்வதும் விவேகானந்தனின் வழக்கம். இதையே கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாக செய்துவந்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகில் உள்ள திருநகரில் விவேகானந்தன், மனைவி, குழந்தைகள் மைத்துனருடன் வாடகை வீட்டில் குடியேறினார். மேலும் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் நீச்சல்குளத்துடன் கூடிய சொகுசு பங்களாவையும் விவேகானந்தன் கட்டியுள்ளார். விவேகானந்தனின் இந்த பகட்டான நடவடிக்கைகளால் திருநகர், திருமங்கலம், மதுரை, காரியாப்பட்டி, விருதுநகர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் விவேகானந்தந் உண்மையிலேயே பெரும் செல்வந்தர் அவரோடு பழகினாலே போதும் நாமும் பெரிய ஆளாகி விடலாம் என்று கனவு கண்டனர். அதனால் பலர் விவேகானந்தனுடன் நட்பு கொண்டு அவர் மூலம் தங்களது நண்பர்கள் உறவினர்களுக்கு ஆசிரியர், சத்துணவு வேலைகளும், வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலைகளும் தங்ககட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தார். குறைந்த விலைக்கு தங்ககட்டிகள் கிடைக்கும் என ஆசைபட்டு ஏராளமானோர் விவேகானந்தனிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தனர். ஏமாந்தவர்களிடம் பல கோடிகளை அபேஸ் செய்த விவேகானந்தன், அவரது மனைவி பிருந்தா, மைத்துனர் கெவின் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநகருக்கு வந்து மோசடியில் ஈடுபட்டு அங்கிருந்தும் தலைமறைவாகி விட்டனர்.
திருநகரில் குடியிருந்த போது பூரணசந்திரன் மற்றும் அவரது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ. 75 லட்சத்தை பெற்றுக் கொண்டு மறுநாளே எஸ்கேப் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் அங்கு ஒரு புதிய சொகுசு காரை வாங்குவது விவேகானந்தனின் வழக்கமாக இருந்தது.
மேலும் தினம் ஒரு விலையுயர்ந்த உடைகள் உடுத்துவதையும், குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 2 முதல் 3 ஆடைகள் அணிந்தும் நேரத்திற்கு ஒரு காரில் பவனி வந்தும் வாடகைக்கு குடியேறும் வீடுகளில் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ளும் வகையில் அங்கு தங்களது சொந்த செலவிலேயே மாற்றங்களையும் செய்து வாழ்ந்துள்ளனர். திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் பல கோடி ரூபாயில் நீச்சல் குளத்துடன் கூடிய புதிய பங்களாவையும் விவேகானந்தன் கட்டியுள்ளார். இது தவிர கொடைக்கானல், ஊட்டி, பெங்களூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் விலை மதிக்கத்தக்க காலி இடங்களையும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாக்களையும் கட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் மதுரையில் பதுங்கியிருந்த பிருந்தாவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கு நேர்மையான வழி இல்லை என அறிந்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு குறுக்கு வழியில் பல கோடியை மோசடி செய்ததாகவும் அப்பணத்தை கொண்டு மிகவும் ஆடம்பரமாக விவேகானந்தன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததாக விவேகானந்தனின் மனைவி பிருந்தா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் விவேகானந்தனை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் இருந்து 6 விலை உயர்ந்த சொகுசு கார்களையும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொகுசு பைக்கையும் ஒன்றேகால் கிலோ தங்க கட்டிகளையும், ஒன்றேகால் கோடி ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விவேகானந்தன் பயன்படுத்திய, போலீசாரால் கைப்பற்றப்பட்ட சொகுசு கார்களின் விவரம் பென்ஸ் கார் ரூ.37 லட்சம், ஸ்கார்பியோ ரூ.9 லட்சம், பஜீரோ ரூ.23 லட்சம், மாருதி பெலினோ ரூ.9 லட்சம், போர்டு ரூ. 8 லட்சம், யமாகா டுகாட்டி பைக் ரூ.1.30 லட்சம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ரோலக்ஸ் பிளாட்டின வாட்சும் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி செய்த பணத்தில் இருந்து விவேகானந்தன் குடும்பத்தினர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தொடரும் மோசடி புகார்கள்
விவேகானந்தன் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் கட்டியுள்ள சொகுசு பங்களா அருகே குடியிருப்பவர் ஓய்வு பெற்ற உதவிக் கலெக்டர் ஜெயம் பெருமாளின் மகன் சிவன் கவி, சுற்றுப் பகுதியை சேர்ந்தவர்களிடம் வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாயை வசூல் செய்து விவேகானந்தனிடம் கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட விவேகானந்தனின் மனைவி பிருந்தா போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் மதுரை வசந்த நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகனுக்கு பொதுப் பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 20.2.2011 ல் ஜெயம் பெருமாள், அவரது மனைவி சிவகாமி, மகன் சிவன் கவி ஆகியோர் 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும் திருப்பூர் அவினாசி ரோடு பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் கொடுத்த புகாரில் தனது மனைவி ரோஸ்லின் மேரிக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக 29.1.2011 ல் மேற்பட மூன்று பேரும் 5 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் மூன்று பேர்கள் மீதும் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சிவன்கவியும், அவரது சகோதரி நிகிதாவும் திண்டுக்கல் பகுதியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோசடி மன்னன் விவேகானந்தனுக்கும், கவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதையும், விவேகானந்தனின் மோசடிக்கு கவி உதவி உள்ளதையும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.