முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனுக்கு பாக். அதிகாரிகள் உதவினார்களா?

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.11-அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை கண்டுபிடித்து கூறுமாறு பாகிஸ்தானை ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த விஷயத்தை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதுதான் அமெரிக்காவின் விருப்பம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரை பொறுத்தவரை பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா மெச்சும் வகையில் நடவடிக்கையை எடுத்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் பயங்கரவாதமே முடிவுக்கு வந்து விட்டதாக கருத முடியாது. பின்லேடனை கொன்றது மிகப் பெரிய வெற்றிதான் என்றாலும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிராந்தியத்தில் வேரூன்றியுள்ள அல்கொய்தா அமைப்பை அடியோடு அழிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்