முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேபிள் டி.வியை உடனடியாக அரசுடமையாக்க பாண்டியன் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.17 - தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேபிள் டி.வியை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான திட்டவட்டமான தீர்ப்பை அளித்துள்ளனர். கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் நடத்தி வந்த பல்வேறு தொழில்களுக்காக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினர். தி.மு.க. அரசு மீதான எதிர்ப்புணர்வு மற்றும் அ.தி.மு.க. அணி மீதான மக்களின் நம்பிக்கை ஆகிய இரண்டும் சேர்ந்தால் அ.தி.மு.க. அணிக்கு இந்த பெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகிறோம். 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மின்வெட்டு, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு போன்ற பல மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது. இந்நேரத்தில் கேபிள் டி.வியை அரசுடமையாக்கும் நடவடிக்கையையும் அ.தி.மு.க. அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்