முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் முதல்வராக கோகாய் நாளை பதவி ஏற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,மே.17 - அசாம் மாநில முதல்வராக தரூண் கோகாய் நாளை 3-வது முறையாக பதவி ஏற்றுக்கொள்கிறார். அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் 3-வது முறையாக காங்கிரஸ் தொடர்ந்து அரசு அமைக்கிறது என்று மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. அதில் முறைப்படி தரூண் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பின்னர் கவர்னரை சந்தித்து அரசு அமைக்க அழைக்குமாறு தரூண் கோகாய் கேட்டுக்கொள்வார். இன்று நடக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் தரூண் கோகாய்க்கு கவர்னர் ஜானகி பல்லவ் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். முதல்வராக கோகாய் பதவி ஏற்ற பின்பு டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களை சந்தித்து யார் யாரை அமைச்சர்களாக நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்வார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்