முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலம் ஆக்குவார் - மோடி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை,மே.17 - தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக்குவார் ஜெயலலிதா என்று நரேந்திர மோடி கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அகமதாபாத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.வினர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் நிருபர்கள்,  ஊழலுக்கும், விலைவாசி உயர்வுக்கும் எதிரான மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பு தமிழகத்தோடு நின்று விடப்போவதில்லை. தேசிய அளவிலும் எதிரொலிக்க இருக்கிறது.  தமிழகத்தை குஜராத்போல் முன்னேறிய மாநிலமாக ஜெயலலிதா மாற்றுவார் என்று நம்புகிறீர்களா? என கேட்டனர்.

அப்போது  நரேந்திரமோடி  நிருபர்களுக்கு கூறுகையில்,

தமிழக மக்கள் ஜெயலலிதா மீது மிகுந்த நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் இந்த மிகப் பெரிய வெற்றியை வழங்கி உள்ளனர். எனவே ஜெயலலிதா மிகச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு நரேந்திர மோடி கூறினார். 

மேலும் அவர் கூறும்போது, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பு ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தற்போது வந்துள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்