எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.- 18 - நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் பணநாயகத்தை மக்களின் ஜனநாயகம் வென்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற 14 வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதற்கு முன்பு வரை நேர்மையாகவும், ஜனநாயகமாகவும் நடைபெற்று வந்த தமிழகத்தின் பொது மற்றும் இடைத் தேர்தல்களில் முதல் முறையாக திருமங்கலம் இடைத் தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியது. அந்த தேர்தல் பணநாயக தேர்தலாகவும் மாறியது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று தேர்தல் அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வீடு வீடாக விநியோகித்தனர். அப்போது தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் தி.மு.க.வினர் மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிலர், பணத்தை பெற்றுக் கொண்டோம் என்பதால் தி.மு.க.வுக்கு பயந்து கொண்டே ஓட்டு போட்டனர். திருமங்கலம் தொகுதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகத்தை தோற்கடித்து பணநாயகத்தை வெற்றி பெற செய்தது. அங்கு தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தி.மு.க.வினர் கோடி கோடியாக பணத்தை செலவு செய்தனர். அங்கு தி.மு.க வெற்றி பெற்ற பின்னர் திருமங்கலம் பார்முலா என்ற புதிய வார்த்தை உருவானது. திருமங்கலத்தை தொடர்ந்து மதுரை மேற்கு, மத்தி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடைத் தேர்தல்களிலும் திருமங்கலம் பார்முலாவையே தி.மு.கவினர் பின்பற்றினர். அங்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து தி.மு.கவை வெற்றி பெறச் செய்தனர். இனி எந்த தேர்தல் நடந்தாலும் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க புதுக் கணக்கு போட்டது.
இந்நிலையில் தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெறும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத் தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவை கடைப்பிடித்து மீண்டும் தி.மு.கவை ஆட்சிக்கு கொண்டு வர தி.மு.க. தலைமையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கணக்குப் போட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தலை சந்திக்க தயாராகினர். இவர்களின் திருமங்கலம் பார்முலாவை கண்டு எதிர்க்கட்சிகளும் கலக்கத்தில் இருந்தன. அப்படியிருந்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் மிகுந்த தைரியத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கினார். அவர்களின் திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கவும் கூட்டணி கட்சியினருடன் ஜெயலலிதா செயல் திட்டம் வகுத்தார்.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீண்குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியாயமான நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதில் இடையூறு ஏற்பட்டது. பறக்கும் படை, வீடியோ குழுக்கள் என பல குழுக்கள் அமைத்து தி.மு.க வினர் கடத்திய பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்து போன தி.மு.க.வினர் பின்னர் சுதாரித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு பொறுப்பாளர்கள் மூலம் ஓட்டுக்கு ரூ. 200 ஐ இரவில் மின்தடை ஏற்படுத்தி வழங்கினர். தொகுதிக்கு ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்தனர்.
இதையறிந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சியினர், நாம் தமிழர் இயக்க நிறுவனர் இயக்குனர் சீமான் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில், தி.மு.கவினர் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா உங்களுக்கு தருகின்றனர். உங்களிடம் இருந்து கொள்ளையிட்ட, உங்களது உழைப்பை சுரண்டிய பணத்தை தானே தருகின்றனர். உங்களது பணத்தை உங்களுக்கு தரும் போது அதை நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ளுங்கள். ஓட்டுக்களை மட்டும் அவர்களுக்கு போட்டு விடாதீர்கள். அப்படி காசுக்காக தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட்டால் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள முடியாது என பிரச்சார மேடைகளில் பேசினர். இவர்களின் இந்த பிரச்சாரமும், தி.மு.க ஆட்சியில் பட்ட துன்பங்களையும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். பணத்தை பெற்றுக் கொண்ட தி.மு.கவிற்கு ஓட்டளித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் நிலை என்ன ஆகும் என மக்கள் யோசித்து தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்து தி.மு.கவினர் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.கவுக்கு எதிராகவும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க ஏக மனதாக முடிவு செய்தனர். தேர்தலின் போது பணம் கிடைக்கப் பெறாதவர்கள் தி.மு.கவினர் வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் உள்ள ஓட்டுக்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லையே. எப்போது கொடுப்பீர்கள் என கேட்டு, பணத்தை பெற்றனர். இது தவிர இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். ஆனால் தற்போது ரூ. 200 மட்டுமே தருகின்றனரே என தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபமடைந்தனர். தற்போது ரூ. 200 கொடுத்து விட்டு ஜெயித்து ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்க நினைக்கும் தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். பணத்திற்கு தங்களை தி.மு.க அடிமையாக்கப் போகிறார்கள், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை, நடுத்தர மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர் என்பதை நன்கு உணர்ந்த தமிழக மக்கள் பணநாயகத்தை முறியடிக்க தீர்க்கமாக முடிவு செய்தனர். அவர்களது கோபங்களை வெளிப்படுத்த தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏப்ரல் 13 ல் அவர்கள் தங்களது கோபங்களை தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்குகளாக பதிவு செய்தனர். முடிவுகள் தி.மு.க வுக்கு மிக மோசமான தோல்வியை ஏற்படுத்தியது. இதன் மூலம் பணநாயகத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்ற தி.மு.கவினரின் எண்ணமும், தப்புக்கணக்கும் தோற்றுப் போயுள்ளது. ஜனநாயகத்தை நம்பிய அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று 3 வது முறையாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக ஆகியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.