முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 21ம் தேதி வட மாநிலங்களில் பந்த்

புதன்கிழமை, 18 மே 2011      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, மே 19 - வருகிற 21 ம் தேதி 6 வட மாநிலங்களில் பந்த் போராட்டம் நடந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் அண்மையில் 3 மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 21 ம் தேதி ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்கரகாண்ட், ஒரிசா, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 24 மணி நேர பந்த் போராட்டத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின்போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுவதால் இந்த 6 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்