முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பார்வையற்ற தொழிலாளர் சங்கம் வாழ்த்து

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.19 - தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றதற்கு எங்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.பதவி ஏற்ற அன்றே மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய உதவித் தொகையை ரூ.500-லிருந்து ரூபாய் ஆயிரமாக உயர்த்தி தந்தமைக்கு சங்கத்தின் சார்பாகவும், பார்வையற்றோர் சமுதாயத்தின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களுடைய பொற்கால ஆட்சியில் மாற்றுத்திறனளிகள் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பீர்கள் என நம்புகிறோம். எங்களது பேராதரவு தங்களுக்கு என்றும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்