முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு கொண்டாட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது

சனிக்கிழமை, 21 மே 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, மே. 22 - மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று, இன்று 3 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதற்கா ன கொண்டாட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடக்கிறது. அப்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இதில் தி.மு.க. பங்கேற்காது என்று தெரிய வருகிறது. 

கனிமொழி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் தி.மு.க. தலைவர்கள் சோகத்தில் உள்ளனர். நேற்று வரை டெல்லியில் இருந்த டி.ஆர். பாலு, உள்ளிட்ட பலரும், நேற்று மாலையிலேயே சென்னை வந்து விட்டனர். 

தயாநிதி மாறன் மற்றும் எம்.பி.க்களும் சென்னைக்கு வந்து விட்டனர். ஆகவே காங்கிரஸ் அரசின் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் நிலையி ல், தி.மு.க. தற்போது இல்லை. காங்கிரசாருடன் இதை கொண்டாட வும் அவர்களுக்கு மனமில்லை. இந்த நிலையில், தி.மு.க. பொதுக் குழு விரைவில் கூடுகிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்