எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.22 - ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் தி.மு.க. எம்.பி.யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் கோர்ட்டில் இருந்தனர். ஒரு கட்டத்தில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் கோர்ட்டில் மயங்கி கீழே விழுந்தார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சி.பி.ஐ. தனது 2-வது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பலன் அடைந்ததாக கூறப்படும் சாகித் பல்வாவுக்கு சொந்தமான டி.பி. ரியாலிட்டி நிறுவனம், குசேகான் நிறுவனம் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவைகள் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி லஞ்சப்பணம் கைமாறியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள்,20 சதவீத பங்குதாரர்களான கனிமொழி, டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பிறகு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். கடந்த மே 6-ம் தேதி கனிமொழி சார்பாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கனிமொழிக்கு எந்த தொடர்பும் இல்லை. ராசாவே முறைகேடுக்கு முழுக்காரணம் என்று வாதித்தார். அதேசமயம் சரத்குமார் சார்பாக மூத்த வழக்கறிஞர் அல்டாப் அகமது ஆஜராகி,சரத்குமாருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித் எக்காரணம் கொண்டும் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷைனி ஜாமீன் வழங்குவது குறித்த தனது உத்தரவை முதலில் 14-ம் தேதிக்கும் பிறகு 20-க்கும் தேதிக்கும் ஒத்திவைத்தார். அதன்படி நேற்றுமுன்தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊழலை குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போது குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருவரையும் காவலுக்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டதையடுத்து இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். டெல்லி திகார் சிறையில் 150 சதுர அடி அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் ஏ.சி.போன்ற வசதிகள் இருக்காது. டி.வி., மின்விசிறி போன்ற வசதிகளும் அளிக்கப்படும். செய்திதாள்களும் அவருக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. நீதிபதி உத்தரவிட்டதையடுத்து பெண் காவலர்கள் கனிமொழியை கையைப்பிடித்து திகார் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார். கனிமொழியுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத்குமார் சிறை எண்-4 ல் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஏற்கனவே கைதான ராசா உள்ளிட்ட நபர்களும் இதே திகார் சிறையில்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆ.ராசாவும் கனிமொழியும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது அவருடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும் டி.ஆர்.பாலு எம்.பி.யும் கோர்ட்டில் இருந்தனர். மகளின் நிலையை பார்த்த ராஜாத்தி அம்மாள் பாட்டியாலா கோர்ட்டில் மயங்கி கீழே விழுந்தார். அதன்பிறகு மீண்டும் கனிமொழியும் ராசாவும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்சுலின் மறுக்கப்படுவதாக புகார்: கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக திகார் சிறை முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
22 Apr 2024புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி டெல்லி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
-
பறவைக் காய்ச்சல் எதிரொலி: அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ள
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
அருணாச்சல பிரதேசத்தில் எட்டு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
22 Apr 2024புதுடெல்லி : அருணாச்சல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்., புகார்
22 Apr 2024புதுடில்லி, ராஜஸ்தானில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.