முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரியம் பிச்சை மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: டாக்டர் சேதுராமன் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 24 - தமிழக சுற்றுச்சுழல் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற மரியம்பிச்சையின் அகால மரணம் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். கடந்த ஐந்தாண்டுகளாக அராஜக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடிய மரியம் பிச்சையின் மறைவு திருச்சி மாநகர மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர். சேதுராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மரியம் பிச்சையை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மலைக்கோட்டை நகரில் வலம் வந்தவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இட்ட கட்டளையை நிறைவேற்றுவதில் திருச்சி மாநகரில் முன்னணியில் நின்றவர் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும் வெற்றி என்றாவது நிச்சயம் என்கிற இலக்கணத்துக்கு உதாரணமாக அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். விபத்து மூலம் மரியம்பிச்சையை பறிகொடுத்து இருக்கிறோம். ஒரு வழிப்பாதை என்கிற நோக்கத்தில் புறநகர் சாலைகளில் அதிவோகமாக வாகனம் இயக்குவது ஆபத்து. வாகனங்கள் இயக்கும்போது கூடுதலாக ஒரு ஓட்டுநர் வைத்துக்கொள்ளவேண்டும் என்று மரியம்பிச்சையின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.
மரியம்பிச்சையின் மறைவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி பாத்திமாவுக்கும் மகன்களுக்கு திருச்சி மேற்கு தொகுதியில் அவரை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்கும், அ.தி.மு.க. தோழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்