முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை எஸ்.எஸ்.எல்.சி.- ஓ.எஸ்.எல்.சி.,தேர்வு முடிவுகள் வெளியீடு- ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 25 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 26 -   நாளை(27ம் தேதி) பத்தாம் வகுப்பு ,மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி), மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை நாளை (27.5.11 வெள்ளிக்கிழமை) வெளியிட ஆணையிட்டுள்ளார்.
இந்த தேர்வுகளின் முடிவுகள் 27.5.11 அன்று  காலை 10.00 மணிக்கு வெளியிடப்படும். மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், கீழே குறிப்பிட்டுள்ள இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும், தங்களது மதிப்பெண்கள் பற்றிய விவரங்களையும் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
இணைய தள முகவரிகள்:-
சூசூசூ.ஙீஹங்ங்டுகூஹங்சுடு.டுடூ, சூசூசூ.சிடூஙுடீஙூசீங்சிஙூ.டூடுஷ.டுடூ, சூசூசூ.க்ஷகிடீ1.சிடூ.டூடுஷ.டுடூ, சூசூசூ.க்ஷகிடீ2.சிடூ.டூடுஷ.டுடூ, சூசூசூ.க்ஷகிடீ3.சிடூ.டூடுஷ.டுடூ இணையதளம் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) சேவை அளிக்கும் முகவரி: சூசூசூ.சிடூஙீசீஸங்டுஷங்டுஸஙுஹஙுடுடீஙூ.கிச்சு.டுடூ
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்