முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.ஏ.எஸ்.சேகர் 67 -வது பிறந்த தின விழா

வியாழக்கிழமை, 26 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே - 26 - தெற்குவாசல் நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான நாசா சார்பில் பள்ளியின் நிறுவனர் கல்வித்தந்தை மறைந்த கே.ஏ.எஸ்.சேகரின் 67-வது பிறந்த தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்நாள் செயலாளருமான கே.ஏ.எஸ்.எஸ்.ரவி தலைமை வகித்தார்.  நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள கே.ஏ.எஸ்.சேகர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.டி.ராஜன், செயலர் சி.காசி, தலைமையாசிரியர் த.பாலசுப்பிரமணியன், ஆசிரியரும் நாசா ஒருங்கிணைப்பாளருமான ரா.பிரின்ஸ் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  முன்னதாக நாசா சார்பில் வழக்கறிஞரும் ஆலோசகருமான எஸ்.இன்பவாணன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றமைக்காக பள்ளி செயலர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாசா சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாடார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவரும் மூத்த விஞ்ஞானியுமான என்.சிவசுப்பிரமணியன் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ரமேஷ், நாகராஜ், பாலாஜி, ஆனந்த்ராஜ், ஆனந்த், கணேஷ், விக்னேஷ், ஸ்டீபன், செந்தில், முத்துஇருளாண்டி, அருண் சுந்தரேஸ்வரன், செண்பகமூர்த்தி, சுரேஷ், பிரேம்குமார், சரவணன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்