எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப்.25 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று 2011 - 12 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல்கள் நெருங்குவதால் இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை. கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. மேலும் நூற்றுக்கும் மேலான புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு மம்தாவால் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 21 ம் தேதி ஆரம்பமானது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், கறுப்புப்பணம் ஒழிக்கப்படும், விலைவாசி கட்டுப்படுத்தப்படும் என்றெல்லாம் அறிவித்தார். டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டி ஒரு பெரிய வெற்றி என்று அவர் வர்ணித்தார். பின்னர் 22 ம் தேதி அலுவல்கள் தொடங்கின. அப்போது சபையில் பேசிய பிரதமர், ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க எம்.பி.க்கள் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று முறைப்படி அறிவித்தார். இந்த வகையில் எதிர்க்கட்சியினரின் மனதை மாற்ற தாம் மேற்கொண்ட முயற்சி தோற்றுப்போனதாகவும் பிரதமர் ஒப்புக்கொண்டார். நேற்று முன்தினம் 3 வது நாளாக கூட்டத்தொடர் நடந்தது. அப்போது தெலுங்கானா பிரச்சனையால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாதது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ராஜ்யசபையில் பதிலளித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஜாதி மதம் பார்த்து கருணை மனுக்கள்மீது முடிவு செய்யப்படுவதில்லை. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் பாராளுமன்ற லோக்சபையில் இன்று 25 ம் தேதி வெள்ளிக் கிழமை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2011-2012 ஆம் ஆண்டுக்கான இந்த ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே மாதம் வருவதால் நிச்சயம் ரயில் கட்டணமோ, சரக்கு கட்டணமோ உயராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் கட்டணங்களில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு மம்தாவால் வெளியிடப்படக் கூடும். எங்குமே நிற்காத 12 க்கும் மேற்பட்ட துரந்தோ ரயில்கள் உட்பட நூற்றுக்கும் மேலான புதிய ரயில்கள் பற்றி இந்த பட்ஜெட் மூலம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயணிகளின் வசதிகளை அபிவிருத்தி செய்யவும் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதன் பொருட்டு பல முக்கிய நகரங்களில் மிகப் பெரிய அளவிலான சமையல் அறைகள் கட்டப்பட்டு அங்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உணவுப் பொட்டலங்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமே இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். புதிய உணவுக் கொள்கையின் அடிப்படையின் கீழ் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்திலும் 2 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் தன்னுடைய மாநிலத்துக்காக பல திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார் மம்தா பானர்ஜி.
ஹவுரா மற்றும் ஷீல்டா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஒரு புதிய திட்டம் பற்றி அறிவிக்கப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். அதன் மூலம் ஓட்டுக்களை பெறவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இருந்தாலும் மற்ற மாநிலங்களுக்கும் அவர் சில ரயில் திட்டங்கள் பற்றி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ரயில்களின் சேவைகள் கூட நீட்டிக்கப்படலாம். வரும் 28 ம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெ
ட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், வல்லுனர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டார். தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 28 ம் தேதி சபையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகை ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பான நிலைக்குழு பரிந்துரையும் அரசுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டதால் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சட்டசபைகளுக்கான தேர்தல் நெருங்குவதால் புதிய வரிகள் இருக்காது. மாறாக சலுகைகளை ஓரளவு எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் மேற்கண்ட பட்ஜெட்டுகள் தேர்தல் பட்ஜெட்டுகளாகவே அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.