முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நர்சுகளை காப்பாற்ற வேண்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மே.- 28 - வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக இராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக பழங்குடியினரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இராணுவ மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர். எதிர்க்கட்சியினரை சேர்ந்த படைகள் இராணுவ முகாமையும், மருத்துவமனையையும் தாக்கி வருவதால் கடந்த சில நாட்களாக இந்த தமிழ் நர்ஸ்கள் உண்ண உணவுமின்றி, உறக்கமுமின்றி, உயிரை கையால் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இராவணுவமும் தங்களது சிகிச்சைக்காக இந்த நர்சுகளை வெளியேற அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் தொடர்ந்து இருந்தால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் தவிக்கின்றனர். அவர்களின் இந்த பரிதாபமான நிலைமையால் அவர்களது உறவினர்கள் தமிழ்நாட்டில் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர். இந்த உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் இந்த தமிழக நர்சுகளை உடனடியாக மீட்கவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரவும் இந்திய அரசு தீவிர நடவடிக்கையில் உடனே ஈடுபட வேண்டுமென்று தே.மு.தி.க. சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்