முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய சூப்பர் சீனியர் சதுரங்கப் போட்டி - டால்பின் மாணவன் தேர்வு

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூன். 1 - அவுரங்காபாத்தில் நடைபெற உள்ள தேசிய சூப்பர் சீனியர் சதுரங்கப் போட்டிக்கு மதுரை டால்பின் பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறான். இது பற்றிய விபரம் வருமாறு - சென்னையில் கடந்த மாதம் 22 முதல் 29 வரை 59 -வது தமிழ்நாடு மா நில பிடே ரேட்டட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரையைச் சேர்ந்த டால்பின் பள்ளியின் 11 -ம் வகுப்பு மாண வன் எஸ்.எஸ் மணிகண்டன் கலந்து கொண்டான். 

மணிகண்டன் 11 சுற்றுக்கு 9 புள்ளிகளைப் பெற்று ரூபாய் 5,000 ரொ க்க பரிசினை வென்றான். இதன் மூலம் அவுரங்காபத்தில் இந்த மாதம் 15 -ம் தேதி தொடங்க உள்ள தேசிய சூப்பர் சீனியர்ஸ் பி பிரிவு சதுரங் க சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் சார்பில், விளையாட தே ர்ச்சி பெற்றுள்ளார். 

தேசிய போட்டிக்கு தேர்ச்சி பெற்ற மணிகண்டனை டால்பின் பள்ளி தாளாளர் ஏ.ஆர். ராமனாதன் வாழ்த்தி நினைவுப் பரிசினை வழங்கி னார். டால்பின் பள்ளி முதல்வர் ஏ.பத்மா தேசிய சூப்பர் சீனியர் பி பிரிவு போட்டியிலும் வென்று, தேசிய சூப்பர் சீனியர்ஸ் ஏ பிரிவில் விளையாட தேர்ச்சி பெற வேண்டுமென்று எஸ். எஸ். மணிகண்டனை வாழ்த்தினார். 

மேலும், டால்பின் பள்ளியின் தலைமை பயிற்சியாளர் எம்.திருநாகலி ங்கம், டால்பின் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மா ணவிகள் எஸ். எஸ். மணிகண்டனை பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்