எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஜூன்.2 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் ஜூன் 6 ம் தேதி நடக்கும் மகா கும்பாபிஷேகத்திற்காக இன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.
முருகப் பெருமானின் முதல் படை வீடும் எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
ரூ. 5 கோடியில் கோயில் மராமத்து பணிகள் செய்து ஜூன் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் துவங்கும் வகையில் அக்டோபர் 30 ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், தூண்கள், சுவர்களில் மராமத்து பணிகள் நடக்கின்றன. கோயிலில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முதல் முறையாக கமலம் வரையும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
7 நிலைகளை கொண்ட 150 அடி உயர ராஜ கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணி நிறைவடைந்து வண்ணமயமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலுக்குள் உள்ள கருங்கற்களினால் ஆன சுவாமி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியும் நடக்கிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி சிலைகளுக்கான மராமத்து பணிகள் நிறைவடைந்து புணுகு சாத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் ஏ.சி. பொருத்தப்பட்டு வருகிறது.
யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்:
யாகசாலை பூஜைகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் 80 யாக குண்டங்கள் ஒரு பிரதான வேதிகையுடன் 5 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 யாகசாலைகளும் அமைக்கப்பட்டு இன்று மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 2 ம் காலம், மாலையில் 3 ம் காலம், வருகிற 4 ம் தேதி காலையில் 4 ம் காலம், மாலையில் 5 ம் காலம், வருகிற 5 ம் தேதி காலையில் 6 ம் காலம், மாலையில் 7 ம் காலம் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து கும்பாபிஷேக தினமான ஜூன் 6 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம்கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு மகாதூப தீபாராதனைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரத்தில் மேல் பகுதியில் உள்ள கலசத்திற்கும், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி விமானங்களுக்கும் கொண்டு செல்லப்படும். பூஜைகள் முடிந்து காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் கோபுர கலசங்களிலும், விமானங்களிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மூலவர்கள், பரிகார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அதனை தொடர்ந்து 7 ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.
புனித தீர்த்தங்கள் வருகை:
யாக சாலையில் வைத்து பூஜிக்கப்படுவதற்காக திருப்பரங்குன்றம், மதுரை, அழகர்கோவில் மலை மீது உள்ள நூபுர கங்கை தீர்த்தம், காவிரி கங்கை உட்பட 6 புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அவை தங்கம், வெள்ளி, குடங்கள் மற்றும் பித்தளை செம்புகளில் நிரப்பி, யாகசாலையில் வைத்து 8 கால பூஜைகள் நடக்கிறது. 6 ம் தேதி காலை இந்த புனித தீர்த்தங்கள் மூலம் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் லிங்கம், நந்தி.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதியிலும் கமலங்கள் வரையும் பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்தான மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு புறம் சுழலும் லிங்கமும், மற்றொரு புறம் சுழலும் நந்தியும் புதிய தொழில் நுட்பம், கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. தரையில் இருந்து இவற்றை பார்க்கும் பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் இந்த நந்தியும், லிங்கமும் அவர்களை நேர்த் திசையில் பார்ப்பது போன்று, எந்த பக்கம் நின்று பார்த்தாலும் அது நேராக தெரிவது போன்றும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.