முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

பெங்களூர்,மே.2 - பெங்களூர் விமான நிலையத்திற்கு இமெயில் மிரட்டல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதையொட்டி விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெங்களூர் விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் முதலில் இமெயில் வந்தது. அதில் விமான நிலையத்தில் வெடிகுண்டு பதுக்கிவைத்திருப்பதாகவும் அது வெடிக்கப்போவதாகவும் கூறப்பட்டிருந்தது. பின்னர் அதிகாரிகளுக்கு நேற்று காலையில் ஒரு மர்ம நபர் போன் செய்தான்.. அதில் விமான நிலையத்தை வெடிகுண்டு வெடித்து தகர்க்கப்போவதாத அந்த மர்ம மனிதன் கூறினான். இதனையொட்டி விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் படையினர் நேற்று பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். விமான நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்திற்கு வருபவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என்பது அந்த மர்ம மனிதனின் பேச்சில் இருந்து தெரியவந்தது. உடனே பெங்களூர் விமான நிலைய அதிகாரிகள் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனையொட்டி சென்னை விமான நிலயைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. பெங்களூரில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானநிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்