முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிண்டி தொழிற்பேட்டையில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - ஊரகத்தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று சிட்கோ, கிண்டி தொழிற்பேட்டையில் ஆய்வு செய்தார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் புதிய சிட்கோ தலைமை அலுவலக மற்றும் அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைவாக குறித்த காலத்திற்குள் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

தற்போது இயங்கி வரும் சிட்கோ தலைமை அலுவலகத்தை பார்வையிட்டு சிட்கோவின் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து உடனடியாக முடிக்க வேண்டிய பணிகளை கேட்டறிந்து, அவைகளை விரைந்து முடிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்