முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முடிவு பற்றி விமர்சனம்: குஷ்பு மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.3​- தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்குத் தான் தோல்வி என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் குஷ்புவின் பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக்கூறி சென்னை எழும்nullர் கோர்ட்டில் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி, இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஐ.பி.சி. 500 சட்டப் பிரிவின் கீழ் குஷ்பு பேசியது குற்றம் என்று புகழேந்தி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை வருகிற 16​ந்தேதி nullதிபதி கிள்ளிவளவன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. அப்போது இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்