எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.10 - மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.வின் மானம் காற்றில் பறந்துகொண்டியிருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாது கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. அதோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறிவிட்டது. அதோடுமட்டுமல்லாது தற்போது தி.மு.க. அமைச்சர் தயாநிதி மாறனும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏர்செல் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் சன் டி.வியில் முதலீடு செய்ய வற்புறுத்தியகாவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இல்லாவிட்டால் வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடமாட்டோம் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது கடும் கோபம் கொண்டியிருப்பதாக தெரிகிறது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழியை பார்க்க சென்ற சோனியாவை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை சோனியா காந்தி புறக்கணித்துவிட்டாரோ என்னமோ தெரியவில்லை. கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டிலும் ஜாமீன் கிடைக்காது என்று கருதிய கருணாநிதி, பெரியார் பிறந்த தினத்தன்று கூடா நட்பு கேடாய் முடியும் என்றார். அதாவது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கக்கூடாது. இனிமேலும் வைக்கக்கடாது என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார் என்பது உண்மையாகும். மேலும் கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை என்று தெரிந்ததும் தி.மு.க. உயர்நிலைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். இந்த கூட்டத்தில் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
கூட்டத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. அப்படி முடிவு எடுத்தால் ஆ.ராசா மாதிரி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது மாதிரி, தயாநிதி மாறனுக்கும் அந்தகதி ஏற்படாமல் தவிர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் எம்.கே. அழகிரி,எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காந்தி செல்வம், டி.நெப்போலியன், எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா 18 எம்.பி.க்கள் உள்ளனர்.
காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறினாலும் அரசுக்கு ஆதரவு தொடரும் என்று காங்கிரசார் பேசிக்கொள்கிறார்கள். அதேசமயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் மத்திய அரசின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் காங்கிரசார் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. தி.மு.க.வை கூட்டணியில் இருந்து விலக்கினால் நாங்கள் ஆதரவு கொடுக்கத்தயார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றுத்தருவதாக உறுதி அளித்திருந்தார். அ.தி.மு.க. வில் தற்போது லோக்சபை எம்.பி.க்கள் 9 பேர் உள்ளனர். அடுத்தவாரம் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல உள்ளார். அப்போது ஏற்கனவே சொன்ன உறுதிமொழியை மீண்டும் கூறுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் மேலிடமும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தோடு தேனீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். மேலும் தமிழக கவர்னராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவுடைகிறது. அதன்பின்னர் மார்க்கெரட் ஆல்வாவை கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொள்வதற்காகவே மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்றும் பேசப்படுகிறது.
இதற்கிடையில் தி.மு.க. கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படலாம் என்ற சஞசலத்தில் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க. உயர்மட்ட கூட்டம் கூறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தி.மு.க. மேல்மட்ட கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு தகுந்தவாறு எங்களது பதில் நடவடிக்கை இருக்கும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.