முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.- 11 - கனிமொழியும் சரத்குமாரும் ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.

ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லியில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் தர மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அவர்கள் இருவரும் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, கனிமொழிக்கும் சரத்குமாருக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சிகளை களைத்துவிடுவார்கள் என்று ஜாமீன் தர மறுத்துவிட்டது. இதையும் எதிர்த்து நேற்று கனிமொழியும் சரத்குமாரும் சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன் கோரி அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தனர். டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன் கோரி சிறப்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம் என்று வழக்கறிஞர் வி.ஜி. பர்கஸ்ம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்