முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ கல்லூரி அணிவகுப்பில் இன்று ஜனாதிபதி பங்கேற்பு

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன் - 11 - டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் பயிற்சி முடிந்து வெளியேறும் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இன்று  ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்  பங்கேற்கிறார். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் பொதுப் பிரிவைச் சேர்ந்த 546 ராணுவ அதிகாரிகள் தங்களது பயிற்சியை முடித்துள்ளனர். இவர்கள் தங்கள் பயிற்சியை முடித்து இந்த கல்லூரியில் இருந்து இன்று வெளியேறி ராணுவத்தில் அதிகாரிகளாக சேர உள்ளனர். இந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு இன்று இந்த கல்லூரியின் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நேற்று டெல்லியில் இருந்து டேராடூனுக்கு விமானத்தில் வந்தார். அதன் பிறகு அவர் விமான நிலையத்தில் இருந்து ராணுவக் கல்லூரிக்கு ஹெலிகாப்டர் விமானத்தில் சென்றார். அவரை ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், ராணுவ கல்லூரியின் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் ஆர்.எஸ்.சுஜ்லானா மற்றும் உத்ரகாண்ட் அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பிரதீபா பாட்டீலுடன் அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத்தும் அவருடன் டேராடூன் வந்தார். இவர்கள் இருவரும் டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரி விருந்தினர் மாளிகையின் தங்கியுள்ளனர். இன்று காலை நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் கலந்துகொள்கிறார் என்று டேராடூன் மாவட்ட போலீஸ் அதிகாரி ஜி.எஸ்.மர்தோலியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்