முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர், ஜூன் - 11 - சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள். பீகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மேற்கு வங்காளம், ஒரிசா உள்ளிட்ட சில வட மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தண்டேவாடா மாவட்டம் கத்திகல்யாண் என்ற இடத்திற்கு அருகே ஒரு வாகனத்தில் நக்சலைட்டு தடுப்பு பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை அந்த வாகனத்தை நோக்கி நக்சலைட்டுகள் வீசினர். இதில் அந்த வாகனம் வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 10 பாதுகாப்பு படை வீரர்களும் பலியானார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 7 பேர் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரிகள். 3 பேர் போலீஸ் ஜவான்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சிறு பாலம் அருகே பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்றபோது அந்த வாகனத்தின் மீது வெடி குண்டை வீசிய நக்சலைட்டுகள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் 3 வீரர்கள் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடிய நக்சலைட்டுகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்