முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சீனாவில் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

பாட்னா, ஜூன் - 12 - பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் சீனா புறப்பட்டு செல்வதற்கு முன்பாக நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சீன அரசின் அழைப்பின்பேரில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சீனாவுக்கு நல்லெண்ண சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்காக அவர் நேற்று தனது உயர்மட்ட குழுவினருடன் டெல்லி சென்றார். டெல்லியில் இருந்து நிதீஷ்குமாரும் அவரது குழுவினரும் இன்று சீனா புறப்பட்டு செல்கின்றனர். பீகார் மீன் வளத்துறை அமைச்சர் விஜய்குமார் செளதாரி, சுற்றுலாத்துறை அமைச்சர் சுனில்குமார் பிங்டூ, வளர்ச்சித்துறை  ஆணையர் கே.சி.ஷா ஆகியோர் இந்த உயர்மட்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர். சீனாவில் உள்ள மின்சார நிலையங்கள், விவசாய, நீர்ப்பாசன முறைகள் ஆகியவற்றை நிதீஷ்குமார் பார்வையிடுவார். மேலும் வருகிற 18 ம்தேதி பெய்ஜிங் நகரில் நடக்கும் புத்தமதமும் ஆசிய வரலாறு மற்றும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் நடக்கும் ஒரு கருத்தரங்கையும் நிதீஷ்குமார் துவக்கிவைக்கிறார். ஷாங்கே நகரில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியிலும் நிதீஷ் பங்கேற்கிறார். மேலும் சீன பெருஞ்சுவரையும் அவர் பார்வையிடுவார் என்று பீகார் மாநில அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்