எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூன்- .13 - தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று 2 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு பயணமாகிறார். இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. தி.மு.க. - காங்கிரஸ் இடையே கசப்புணர்வு தோன்றி விட்ட நிலையில் ஜெயலலிதா இன்று டெல்லிக்கு செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பிறகு மே 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. 29 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 21 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்ததோடு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து விட்டது. இதன் காரணமாக தமிழக சட்டசபையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். அவரது கட்சிக்கு இப்போது அங்கீகாரமும் கிடைத்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மூன்றாவது முறையாக தமிழகத்தில் பதவியேற்றது. அவருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அன்றே கோட்டைக்கு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 7 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன் பிறகு பல முறை அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரும் நடந்து முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று 2 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அதாவது முதல்வராக பதவியேற்ற பிறகு ஜெயலலிதா டெல்லி செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி செல்லும் ஜெயலலிதா அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார்.
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டசபையில் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலிலதா டெல்லியில் பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசவுள்ளார். மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமருடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்துகிறார். சட்டசபை தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். எனவே டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்திக்கக்கூடும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. மத்திய மந்திரியாக இருந்த ஆ. ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக கருணாநிதி மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் இருக்கிறார். இவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கனிமொழி கைது செய்யப்பட்ட விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் அப்செட்டாகி உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறார். ஆனால் சில தி.மு.க. தலைவர்கள் அதை விரும்பவில்லையாம். காரணம், ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு தி.மு.க. மத்திய அமைச்சர்கள் பதவி விலகும் பட்சத்தில் தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, மு.க. அழகிரி மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம் என்று சில தி.மு.க தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் தி.மு.க. உயர்நிலைக் கூட்டத்தில் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டதாம். அதனால்தான் மத்திய அமைச்சர்கள் விலகும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இருந்தாலும், காங்கிரஸ் மீது கருணாநிதி கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலிலதா டெல்லிக்கு செல்கிறார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் ஜெயலலிதா டெல்லிக்கு செல்கிறார். ஆகவே அவரது இந்த 2 நாள் அரசியல் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. காங்கிரஸ் இடையே கடந்த 10 ஆண்டு காலமாக உறவு இல்லாமல் இருந்து வந்தது. காங்கிரசுக்கு அ.தி.மு.க தலைமை பல முறை நேசக்கரம் நீட்டியும் அதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாமல் இருந்தது. ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் அருமை அவர்களுக்கு புரிந்து விட்டது போலும். ஆகவே, அ.தி.மு.க.வுடன் அவர்களாகவே வலிய வந்து நேசக்கரம் நீட்டினாலும் ஆச்சரியமில்லை. எது எப்படியோ, ஜெயலலிதா டெல்லி சென்று வந்த பிறகு சில மாறுதல் காட்சிகள் கண்ணுக்குத் தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.