முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர்: காங்கிரசும் வலியுறுத்துகிறது

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

குணா,(ம.பி.) ஜூன் - 13 - ஊழலை ஒழித்துக்கட்ட வகை செய்யும் லோக்பால் மசோதா என்ற வரம்பிற்குள் பிரதமரையும், நீதித்துறையையும் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கும் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், நீதித்துறை, தொழிற்சாலைகள் ஆகிய அனைத்தும் கொண்டுவரப்பட வேண்டும். லோக்பால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. அதற்கு வழிவகை செய்ய வேண்டும். நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்தபோது, லோக் அயுக்தா வரம்பிற்குள் முதல்வர் பதவியையே கொண்டுவந்தேன். எனவே லோக்பால் மசோதா வரம்பிற்குள் யாராக இருந்தாலும் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறு திக்விஜய் சிங் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்