முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவிலிருந்து இந்தியர்களை மீட்க 2 விமானங்கள்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

புது டெல்லி,பிப்.27 - லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் நாளை லிபியா செல்கிறது. லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் அந்த நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலையில் சிக்கி தவிக்கிறது. அங்கு 18 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு லிபியாவில் தரையிறங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி, மும்பையில் இருந்து தலா ஒரு விமானம் 10 நாட்களுக்கு தொடர்ந்து லிபியா சென்று அங்குள்ள இந்தியர்களை மீட்டு வரும் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்