முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளை நேசிக்கும் ஒரே தலைவி ஜெயலலிதா - சீனிவாசன்

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், பிப்.27 - முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்னர் ஏழை, எளிய மக்களை நேசிக்கக் கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான் என்று திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் 630 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரவை செயலாளர் பாரதிமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில்,

விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டுமென்றால் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும். எனவே அவர் மீண்டும் முதல்வராக ஆண்டவனை பிரார்த்திக்க வேண்டும். எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின் ஏழை, எளிய மக்களைப் பற்றி நினைக்கக் கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாக்கிற்கு இணங்க மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமையும். உண்மையை அழிக்க முடியாது. சத்தியத்தை தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து தான் பல்வேறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து வருகின்றனர். கூட்டணியின் பலம் கட்சிக்கு மிகப்பெரிய பலம் தான். 

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ரூ.1.80 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஜெயலலிதா வெளிக்கொணர்ந்த பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 4 3/4 ஆண்டு  தி.மு.க. ஆட்சியும், மத்தியில் 1 1/2 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியும் நாட்டை மிகக்கேவலமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் விலைவாசி உயரவில்லை. சிறந்ததொரு ஆட்சியை வழங்கினர்.  

ஆட்சி முடியும் தருவாயில் இலவச டி.வி. வழங்கி  வருகின்றனர். அதற்கு கேபிள் கட்டணமாக ரூ.180 கட்ட வேண்டும். அத்தொகை கருணாநிதிக்குத் தான் செல்கிறது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இலவசமாகவே இணைப்பு வழங்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி மலர தாய்மார்களின் ஆதரவைத் தர வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago