முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

23 மீனவர்களை விடுவிக்க தங்கபாலு பிரதமருக்கு கடிதம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை,ஜூன்.- 23 - இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு உடனடியாக அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இருவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக தங்கபாலு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்