முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும் மத்தியஅரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூன்.- 23 - இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனே தலையிட்டு மீட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கைது  செய்யப்படுவதும், அவர்களின் படகுகள், மீன்கள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாக உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து,  தமிழகத்திற்கு திரும்ப அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, மேற்கண்ட பிரச்சனை மீது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமெனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்