முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியாவுடன் உமாபாரதி சந்திப்பு

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.27 - கங்கையை தூய்மைப்படுத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி டெல்லியில் சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கும், சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார். 

கங்கையை தேசிய நதியாக அறிவித்து அதனை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணியை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்தினேன். கங்கையை தூய்மைப்படுத்த இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இக்குழுவினர் கங்கையில் ஆய்வு செய்து அதன் மாசு அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த விவகாரத்தை தேசிய மாநில கட்சிகள் அரசியலாக்க கூடாது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்