எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, பிப்.28 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணி இலங்கையை வென்றது. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் போட்டி, ஏ பிரிவில் உள்ள அணிகளான பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடையே நடந்தது. பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தங்கள் முதல் லீக் போட்டிகளில் வெற்றிபெற்ற நிலையில், இந்த இரண்டாவது லீக் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக அஹமது ஷேஸாத் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் களமிறங்கினர். துவக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பாக். அணியின் ஸ்கோர் 28 ஐ எட்டியபோது 13 ரன்களை எடுத்திருந்த அஹமது ஷேஸாத், வேகப்பந்துவீச்சாளர் பெரைராவின் பந்தில் விக்கெட் கீப்பர் சங்கக்காராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், முகமது ஹபீசுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு அடித்து விளையாடியது. அணியின் எண்ணிக்கை 13.1 ஓவரில் 76 ரன்களை எட்டியபோது மற்றொரு துவக்க வீரர் ஹபீசும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக்கப்பட்டார். அடுத்ததாக அனுபவ வீரர் யூனிஸ்கான் களமிறங்கினார். 20.2 ஓவர்களில் பாக். அணி 105 ரன்களை எடுத்திருந்தபோது 39 ரன்களை எடுத்திருந்த கம்ரான் அக்மல், ஹெராத்தின் வேகப்பந்தில் சங்கக்காராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கானுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் பாக். அணி சிறப்பான ஸ்கோரை எட்ட உதவியது. இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களை கடந்தனர். அணியின் எண்ணிக்கை 213 ஐ அடைந்தபோது 72 ரன்களை எடுத்திருந்த யூனிஸ்கான், ஹெராத்தின் வேகத்தில் ஜெயவர்த்தனேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். யூனிஸ்கானுக்கு பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தாலும் மிஸ்பா உல் ஹக் மட்டும் தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக பாக். அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்தது. மிஸ்பா உல் ஹக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 பந்துகளில் 83 ரன்களை அடித்தார். இலங்கை தரப்பில் பெரைரா மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முரளீதரன் மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 278 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்கு இலங்கை அணிக்கு வைக்கப்பட்டது.
சற்று கூடுதலான இலக்கை சேஸ் செய்த இலங்கை அணியின் துவக்க வீரர்கள் தில்சான் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 76 ரன்களை சேர்த்த நிலையில் முதல் விக்கெட்டாக தரங்கா, முகமது ஹபீசின் பந்துவீச்சில் ஷாகித் அப்ரிடியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே துவக்க வீரர் தில்சன் 41 ரன்கள் எடுத்த நிலையில், பாக். கேப்டன் அப்ரிடியின் சுழல்பந்தில்
கிளீன்போல்டானார். அடுத்து ஜெயவர்த்தனே 2 ரன்களே எடுத்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தரின் பந்தில் போல்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து இறங்கிய சமரவீரா 1 ரன்னை மட்டும் எடுத்து அப்ரிடியின் பந்தில் விக்கெட் கீப்பர் அக்மலால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 21.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களாக இருந்தது. ஜெயவர்த்தனே மற்றும் சமரவீராவின் விக்கெட்டுகள் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து கேப்டன் சங்கக்காரா மற்றும் சமர சில்வா ஜோடி இலங்கை அணியை ஓரளவு கெளரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. அணியின் எண்ணிக்கை 169 ஐ எட்டியபோது சங்கக்காரா, அப்ரிடியின் சுழல்பந்தில் அஹமது ஷேஸாத்தால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதன் பிறகு சமரசில்வா மட்டுமே சிறப்பாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 233 ஐ எட்டியபோது, 57 ரன்களை எடுத்திருந்த சமரசில்வா, அப்துர் ரெஹ்மானின் பந்தில் கீப்பர் அக்மலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து குலசேகரா சில அதிரடி ஷாட்களை ஆடினாலும் அது இலங்கை அணியின் வெற்றிக்கு உதவவில்லை. கடைசி ஓவரில் 13 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இறுதி ஓவரை உமர்குல் வீசினார். இந்த ஓவரில் குலசேகராவின் விக்கெட்டும் வீழ்ந்தது. இதையடுத்து அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஹெராத் 4 ரன்களுடனும், முரளீதரன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். பாக். தரப்பில் கேப்டன் அப்ரிடி மிகச் சிறப்பாக பந்துவீசி 34 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்தர் 2 விக்கெட்டுகளையும், உமர்குல், ஹபீஸ், ரெஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பாக். அணி இரண்டாவது வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை பெற்றுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.